சினிமா
பேட்டி - கட்டுரைகள்

வசந்த முல்லை மேலே மொய்த்த வண்டு!

கவிஞர் யுகபாரதி; ஓவியம்: மாசெ

Published:Updated:
மருதகாசி
பிரீமியம் ஸ்டோரி
மருதகாசி
Comments
Share

ந்த ஆண்டு பாடலாசிரியர் மருதகாசியின் நூற்றாண்டு.

மருதகாசி, எழுத்துகளின் வழியே இன்றைக்கும் மக்கள் மத்தியில் தம் இருப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார். அவர் மரபிலக்கியச் சாயல்களையும் தமிழ் மண்ணின் கலாசாரப் பெருமிதங்களையும் திரைப்பாடல்களில் கொண்டுவந்தவர். திருச்சியை அடுத்த மேலக்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர். பாபநாசம் சிவனின் சகோதரரும் பாடலாசிரியருமான ராஜகோபால அய்யரிடம் உதவியாளராக இருந்த அனுபவமும் அவருக்குண்டு. அருணாசலக் கவிராயரின் படைப்புகளில் உந்தப்பட்டு எழுதத்தொடங்கிய மருதகாசி, கல்லூரிக் காலத்திலேயே நாடகங்களுக்குப் பாட்டெழுதிப் பழகியிருக்கிறார்.

திருச்சி லோகநாதனின் இசையமைப்பில் வெளிவந்த அவருடைய நாடகப்பாடல்கள் அக்காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அரு. ராமநாதனின் வானவில் நாடகத்திற்கு மருதகாசி எழுதிய ஒரு பாடல், மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர். சுந்தரத்திற்குப் பிடித்துப்போக, திரைத்துறைக்குள் நுழையும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.