அரசியல்
சமூகம்
அலசல்

‘மெர்சல்’ ரிலீஸுக்கும் நாங்கதான் காரணம்... - ‘சர்கார்’ பிரச்னைக்கும் நாங்கதான் காரணம்!

அமைச்சர் கடம்பூர் ராஜு அதிரடி

Published:Updated:
கடம்பூர் ராஜு
பிரீமியம் ஸ்டோரி
கடம்பூர் ராஜு
Comments
Share

‘‘முப்பது வருடங்களாக டிக்கெட் கட்டணம் வரைமுறை செய்யாமல் இருந்தது. அதையடுத்து, அரசு ஒரு குழு அமைத்து, கட்டணத்தைச் சீரமைத்தது. மல்டி ஃப்ளெக்ஸ், ஏ.சி, சாதாரண திரையரங்கம்... ஒவ்வொன்றுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. மூடப்படவிருந்த பல திரையரங்குகளை அரசு காப்பாற்றியுள்ளது. தற்போது `சினிமா டிக்கெட், ஆன்லைன் மூலமாகவே விற்க முடியும்’ என்று அரசு அறிவித்திருக்கிறது. தியேட்டர் டிக்கெட் கவுன்டர்களில் கேட்டாலும், ஆன்லைன் மூலம்தான் டிக்கெட் பதிவுசெய்ய முடியும். இதனால், அதிக விலைக்கு டிக்கெட்டை இனி விற்க முடியாது. படத்தின் வசூலைச் சரியாகக் கணக்கிட முடியும். நடிகர்களின் சம்பளத்தை, தயாரிப்பாளர்கள் வரையறை செய்வார்கள். வரி ஏய்ப்புக் குறையும்’’ - படபடவென... அதேசமயம் ஆணித்தரமாகப் பேசுகிறார் செய்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.