‘வனத்துக்குள் ஒரு வீடு’ - சந்தன மரம் வளர்க்கும் சிங்!
4 Min Read
வீட்டுத்தோட்டம்
Published:Updated:
தமிழ்நாட்டில் வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைப்பது பரவலாகி வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் சிறிய இடங்களில் தோட்டம் அமைத்துவருகிறார்கள் நகரவாசிகள். அந்த வரிசையில் சென்னை, முகப்பேர், ஸ்பார்டன் அவென்யூ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அமைக்கப் பட்டுள்ள வீட்டுத்தோட்டம் அனைவரையும் கவர்ந்திழுக்கிறது. காடுபோல வீட்டுக்குள் இருந்த அந்த வனத்துக்குள் நுழைந்தோம். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார், வனத்தின் உரிமையாளர் ஜஸ்வந்த் சிங்.