ஸ்டாலின் மீது பாட்டில் வீச்சு; தர்மபுரி கூட்டத்தில் பரபரப்பு
ஸ்டாலின் மீது பாட்டில் வீச்சு; தர்மபுரி கூட்டத்தில் பரபரப்பு
தர்மபுரி: தர்மபுரியில் நேற்றிரவு நடந்த தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தின்போது குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர், ஸ்டாலினை நோக்கி வாட்டர் பாட்டிலை எறிந்ததால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரியில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு ஆயிரக்கணக்கில் கூட்டம் திரண்டிருந்தது. இதனால் மேடையை தொட்டுக்கொண்டு கூட்டம் முண்டியடித்தது. மேடைக்கு கீழே நின்று செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிக்கையாளர்கள் நெரிசலில் சிக்கி தவித்தனர்.
ஒரு கட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் அனைவருமே மேடையின் மேல் ஏறி வெளிப்புற விளிம்பில் நின்றபடியும், உட்கார்ந்தபடியும் ஸ்டாலின் பேச்சினை பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது , மேடையில் நின்றிருந்த சில வீடியோகிராஃபர்கள் மறைத்துக் கொண்டதால் ஸ்டாலினை பார்க்க முடியாமல் தொண்டர்கள் தவித்தனர். சிலர் கோபமடைந்து பத்திரிக்கையாளர்களை நோக்கி கூச்சலிட்டும் பார்த்தனர்.
ஆனால் அவர்கள் நகராமல் வீடியோ எடுத்துக்கொண்டிருக்கவே குடிபோதையில் இருந்த தொண்டர் ஒருவர் , தன் கையில் வைத்திருந்த, வாட்டர் பாட்டிலை ஒரு வீடியோகிராஃபரை நோக்கி வேகமாக வீசினார். அந்த நேரம் பார்த்து அந்த வீடியோகிராபர் ஏதேச்சையாக ஒரு அடி நகர்ந்து போக, அவருக்கு வெகு அருகாமையில் ‘போடியம்’ அருகே நின்று பேசிக்கொண்டிருந்த ஸ்டாலினை நோக்கி இந்த வாட்டர் பாட்டில் பாய்ந்தது.
##~~## |