போனில் வரும் அழையா விருந்தாளிகள்!
டெலிகாலர்கள் ஜாக்கிரதை!
இன்றைக்கு போன் மூலம் அழையா விருந்தாளிகளாக வந்து அடிக்கடி தொல்லை தருபவர்களாக இருக்கிறார்கள் டெலிகாலர்கள். ‘‘சார், உங்களுக்கு 10 லட்ச ரூபாய் பர்சனல் லோன் தரத் தயார். `ஓகே’ன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க. உங்க அக்கவுன்ட்ல பணம் வந்துடும்’’ என்று ஆசை வார்த்தை காட்டுபவர்கள் ஒரு வகை. ‘‘இதுவரைக்கும் நீங்க எந்த இன்ஷூரன்ஸ் பாலிசியும் எடுக்கலைன்னா, நாங்க சொல்ற இந்த பாலிசியில பணத்தைப் போடுங்க. உங்களுக்கு டபுளா, ட்ரிபிளா பணம் கிடைக்கும்’’ என்று தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளிவிடுவதுபோலப் பேசுபவர்கள் இன்னொரு வகை. ‘‘சார், உங்க சிபில் ஸ்கோர் சூப்பரா இருக்கு. உங்களுக்கு பிளாட்டினம் கிரெடிட் கார்டு தரத் தயாரா இருக்கோம்... வாங்கிக்கிறீங்களா?’’ என்று கேட்கும் கர்ணப்பிரபுகள் மற்றொரு வகை என டெலிகாலர்களின் அட்டகாசம் அண்மைக்காலமாக அதிகமாகவே இருக்கிறது.