உங்களது வங்கி கணக்கில் 10000ரூபாய்க்கு மேல் இருக்கிறதா? அப்போ இதை படியுங்கள்

new plan about bank bal

வருகிறது புதிய திட்டம்:

வங்கி கணக்கில் இவ்வளவு பணம் வைத்திருந்தால் வறுமை கோட்டிற்கு கீழ் வரமாட்டீங்க.

பாஜக அரசு சமீப காலமாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திவருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி என பல்வேறு புதிய திட்டங்களை அமல்ப்படுத்தியுள்ளது. அதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. தற்பொழுது கிராமப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள் ரூ10,000துக்கு மேல் வங்கி கணக்கில் வைத்திருந்தால் அவர்கள் வறுமை கோட்டிற்கு மேல் இருப்பதாக மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகிவுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, பெண்களின் எண்ணிக்கை, சுயமாக சம்பாதிக்கும் உறுப்பினர்கள், பெண்களின் பொருளாதார ரீதியான பங்களிப்பு என 21காரணங்களை அடிப்படையாக வைத்து முடிவெடுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை ‘மிஷன் அன்த்யோதயா’ என்ற பெயரில் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் மூலமாக 50,000 வறுமையில்லாத பஞ்சாயத்துகளை உருவாக்க திட்டமித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.