இந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை

மேஷராசி அன்பர்களே!... பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.

Published:Updated:
இந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை
இந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை
0Comments
Share

ந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் எளிய பரிகாரங்களுடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி

மேஷராசி அன்பர்களே!

பணவரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வீண் செலவுகளும் ஏற்படுவதற்கில்லை. நண்பர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் - மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. 
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். அதிகாரி களின் ஆதரவு உற்சாகம் தரும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம்.
வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும். சக வியாபாரிகளுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கி, சுமுகமான உறவு ஏற்படும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கடும் முயற்சியின் பேரிலேயே கிடைக்கும். வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதில் சில தடைகள் ஏற்படக் கூடும்.
மாணவர்கள் கடுமையாக உழைத்துப் படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். ஆசிரியர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வாரப் பிற்பகுதியில் மனதில் சிறுசிறு சலனம் ஏற்படக் கூடும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சக பணியாளர்களால் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11, 12, 13, 14, 15
அதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை
அதிர்ஷ்ட எண்கள்: 7,9

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கைதணி விப்பான்- விநாயகனே
விண்ணுக்கும் மண்ணுக்கும் நாதனுமாந் தன்மையினாற்
கண்ணிற பணிமின் கனிந்து

ரிஷபராசி அன்பர்களே!

பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் சாத்தியம் உள்ளது. சகோதர வகையில் இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் கசப்பு உணர்வுகளும் மாறி, சுமுகமான உறவு ஏற்படும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் தேவையான உதவியும் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். 
அலுவலகத்தில் கடுமையாக உழைத்தாலும் நல்ல பெயர் கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அலுவலகப்பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சிறிய தவறுகூட பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பழைய கடன்கள் தீரும். பங்குதாரர்களால் தேவையான உதவி கிடைக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.
கலைத்துறையினருக்கு போதிய வருமானம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படும்.
மாணவர்களுக்கு தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்களின் பாராட்டுகள் உற்சாகப்படுத்தும்.
குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு சற்று சிரமமான வாரம். செலவுகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்கள் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும்.

 அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 13, 14, 15
அதிர்ஷ்டம் தரும் நிறம்: பச்சை
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர்:  10

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறை முடித்த
ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கே - அன்பு முன்பு
செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே

மிதுனராசி அன்பர்களே!

பண வரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் நண்பர்கள் உதவி செய்வார்கள். பழைய கடன்களைத் தந்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சுபநிகழ்ச்சிக் கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.  
அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம், பதவி மாற்றம் கிடைக்கும் என்றாலும் அதனால் நன்மையே நடக்கும்.
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் வரும் என்றாலும் அதனால் போதிய வருமானம் வருவதற்கில்லை.
மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டிய காலம். சக மாணவ மாணவியரிடம் அளவோடு பழகவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு திருப்திகரமான வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு சற்று சோர்வு ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  10
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9
சந்திராஷ்டம நாள்கள்: டிசம்பர்: 11, 12

வழிபடவேண்டிய தெய்வம்: சிவபெருமான்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்
முன் செய்த மூவெயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்
மின் செய்த நுண்ணிடையாள் பரவை இவள் தன் முகப்பே
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே.

கடகராசி அன்பர்களே!

குடும்பத்தில் கணவன் - மனைவிக்கிடையே சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். ஒருவரை யொருவர் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும் வாரம். பணவரவைப் பொறுத்தவரை பிரச்னை எதுவும் இல்லை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று அலைச்சல் ஏற்படும்.
வேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக் கும். மேலதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். 
வியாபாரத்தில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிவு உண்டாகும். பற்று வரவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் அதைச் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளமுடியாதபடி சில தடைகள் உண்டாகும்.
மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். பாடங்களில் ஆர்வம் கூடும். பெற்றோர் உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார்கள்.
குடும்பத்தை  நிர்வகிக்கும் பெண்கள் பொறுமையாக இருக்கவேண்டிய வாரம். வேலைக்குச் சென்று வரும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 11, 12
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 7, 9
சந்திராஷ்டம நாள்கள்:  டிசம்பர் 13, 14, 15

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

சிம்மராசி அன்பர்களே!

பொருளாதார வசதி நல்லபடியே காணப்படுகிறது. கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் அதைச் சமாளித்துவிட முடியும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கும்போது பொறுமை அவசியம். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிரச்னைகள் தீர்ந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை.
அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகவே காணப்படுவீர்கள்
வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் தகுந்த எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். மற்றபடி வியாபாரம் வழக்கம்போலவே காணப்படும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
மாணவர்கள் உடல்நலனில் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மற்றபடி பாடங்களில் கூடுதல் ஆர்வம் ஏற்படும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 15
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5
சந்திராஷ்டம நாள்: 16

வழிபடவேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதி சூடி
காடுடைய சுடலைப் பொடிபூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் முனைநான் பணிந்து ஏத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன் அன்றே!

கன்னிராசி அன்பர்களே!

குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சிறுசிறு பிரச்னைகள் நீங்கி, குதூகலம் குடிகொள்ளும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் எண்ணப்படி நடந்துகொள்வார்கள். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்து, மகிழ்ச்சி அடைவீர்கள். சகோதரர் நீங்கள் கேட்ட உதவியை செய்து தருவார். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும்.
வேலைக்கு விண்ணப்பம் செய்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். லாபம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை எதுவும் இருக்காது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பணவரவும் கூடுதலாகக் கிடைக்கும். சக கலைஞர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
மாணவர்களுக்கு தேவையற்ற மனக் குழப்பங்கள் உண்டாகும். ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் மனம் விட்டுப் பேசி தெளிவு பெறுவது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு மனதை சஞ்சலப்படுத்தும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். சலுகைகளும் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 14, 15
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் சிவப்பு
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 8

வழிபடவேண்டிய தெய்வம்: விநாயகர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

ஐந்துகரத்தனை ஆனைமுகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்திமகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுவனே

துலாராசி அன்பர்களே!

உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையான பணவரவு உண்டு. சிலருக்கு வீண்செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாளாகச் செல்ல நினைத்த புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும்.
வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீர்கள். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.
கலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைத் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வதுடன் சக கலைஞர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது அவசியம்.
மாணவர்களுக்கு பிரச்னை இல்லாத வாரம். படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 7

வழிபடவேண்டிய தெய்வம்: துர்கை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா
வைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே
செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே

விருச்சிகராசி அன்பர்களே!

பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். ஆனாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். பிள்ளைகள் வகையில் செலவுகள் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.
அலுவலகத்தில் நீங்கள் எவ்வளவுதான் உழைத்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது. சக பணியாளர்களிடம் தேவையான ஒத்துழைப்பு கிடைக்காது. பொறுமையைக் கடைப்பிடிப்பதுதான் எதிர்காலத்துக்கு நல்லது.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவி செய்வார்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பது தள்ளிப்போகும். பண வசதியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி கிடைக்கும் என்றாலும் சிறு சிறு காயம் ஏற்படக்கூடும் என்பதால் போட்டிகளில் கவனமாக ஈடுபடவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கடன்படவும் நேரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11, 12
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5, 7

வழிபடவேண்டிய தெய்வம்: ரங்கநாத பெருமான்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

விரும்பிநின் றேத்த மாட்டேன் விதியிலேன் மதியொன் றில்லை
இரும்புபோல் வலிய நெஞ்சம் இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டேன் கண்ணிணை களிக்கு மாறே.

தனுசுராசி அன்பர்களே!

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாரப் பிற்பகுதியில் நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படும். திருமணத்துக்கான முயற்சிகளை மேற்கொள் ளலாம். நல்ல இடத்தில் வரன் அமைவதற்கு வாய்ப்பு உள்ளது. 
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக் கவும்,
வியாபாரத்தில் விற்பனையை அதிகரிக்கக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பணியாளர்க ளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டா லும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால், வருமானம் ஓரளவுக்குதான் இருக்கும். சக கலைஞர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். 
மாணவர்களுக்கு பாடங்களில் ஆர்வம் குறைவதற்கான வாய்ப்பு உண்டு என்பதால், மனதை அலைபாய விடாமல் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். அலுவலகம் செல்லும் பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 13, 14, 15
அதிர்ஷ்ட நிறம்: சந்தனம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்:1, 9

வழிபடவேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர்
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

மகரராசி அன்பர்களே!

வருமானத்துக்குக் குறைவிருக்காது. உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பா டாகும். கணவன் - மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் பெருமைப்படும் செய்தி கிடைக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாரத் தொடக்கத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். பணியின் காரணமாக சிலர் வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.
வியாபாரத்தை விரிவுபடுத்தவும், சரக்குகளைக் கொள்முதல் செய்யவும் சிலருக்கு வெளிமாநிலப் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடி  வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இல்லை. சக கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.
மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். ஆசிரியர் பாடம் நடத்தும்போது கூர்ந்து கவனிப்பதில் ஆர்வம் ஏற்படும். ஆசிரியர்களிடம் பாராட்டு பெறும் வாய்ப்பு ஏற்படும். 
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்குத் தேவையான பணம் இருப்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 11, 12 
அதிர்ஷ்ட நிறம்: வெண்மை
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 6, 9

வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான்.
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்!
வெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்! - நெஞ்சில்
ஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்!
முருகா என்று ஓதுவார் முன்!

கும்பராசி அன்பர்களே!

புதிய முயற்சிகள் எதையும் வார ஆரம்பத்திலேயே தொடங்கிவிடுவது நல்லது. நீண்டநாளாக நினைத்த சுபநிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு. திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். வாரப் பிற்பகுதியில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. 
வேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தினரின் ஆதரவு கிடைக்கும்
புதிதாக வியாபாரம் தொடங்க விரும்புபவர்கள் இந்த வாரம் தொடங்கலாம். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.
சக கலைஞர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும்.
மாணவர்கள் உடன் படிக்கும் நண்பர்களுடன் அளவோடு பழகவும். பாடங்களில் தீவிர கவனம் செலுத்தவேண்டியது அவசியம்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் பணிகளைப் பொறுப்பாகச் செய்வது நல்லது.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 10, 14, 15
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3, 5

வழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமகாவிஷ்ணு
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

பச்சைமாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா! அமரரேறே! ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமாநகருளானே

மீனராசி அன்பர்களே!

குடும்பத்தில் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். பணவரவுக்குக் குறைவிருக்காது. கணவன்  - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர் களால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். சிலருக்கு பணியிடத்தில்  மாற்றம் ஏற்படக்கூடும். 
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம். விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதிலும், வருமானத்துக்கும் குறைவே இருக்காது. மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்பட வாய்ப்பு உண்டு என்பதால், மனதை ஒருமுகப்படுத்தி பாடங்களைப் படிப்பது அவசியம்.
குடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்கள் குடும்ப நிர்வாகத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தரும் நாள்கள்:  10, 11, 12
அதிர்ஷ்டம் தரும் நிறம்: வெண்மை
அதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2, 6

வழிபடவேண்டிய தெய்வம்: அம்பிகை
பரிகாரம்:தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபமேற்றி, கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.

இல்லாமை சொல்லி ஒருவர்தம்பால் சென்று இழிவுபட்டு
நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல் நித்தம் நீடுதவம்
கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒருக்காலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே