2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகளுடன், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த உள்ளார்.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் படி, மநீம தலைவர் கமல்ஹாசன் தலைமையில், ஏப்ரல் 28 ஆம் தேதி கோயம்புத்தூரில், 2024 நாடாளுமன்றத் தேர்தல் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், கோயம்புத்தூர் மற்றும் சேலம் மண்டலங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் விடிய விடிய போராட்டம்!
அண்மையில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டிருந்தார். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திலும் கலந்து கொண்டிருந்தார். இந்நிலையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பாரா? அல்லது தனித்து போட்டியிடுவாரா? என்று அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்ப்பில் மூழ்கியுள்ளன.