இளைஞர்கள் விடுமுறை நாட்களை கொண்டாடுவதற்குத் தான் பயணங்களை மேற்கொள்வார்கள் என்ற பொதுவான கருத்து உண்டு. ஆனால் அதற்கு முற்றிலும் மாறாக பிளாஸ்டிக் ஒழிப்பு என்ற பொதுநலனுக்காக பயணத்தை மேற்கொண்ட விஜய் என்ற இளைஞரைப் பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு….
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்த உணவக பணியாளரின் மகனான இளைஞர் விஜய், சமூகத்துக்கு தொண்டு செய்யும் உயரிய நோக்கம் கொண்டவர். அதற்காக அண்மையில் இவர் ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவுக்கு எடுத்துக் கொண்டு, நடந்தும் வாகனங்களில் லிஃப்ட் கேட்டும் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களை 10 நாட்களில் சுற்றி வந்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஊர் சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவர் இந்த பயணத்தை மேற்கொள்ளவில்லை. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். Walk For Plastic என்ற அமைப்பை சேர்ந்த குழுவினரின் சமூக பங்களிப்பை ஆச்சரியத்துடன் பார்த்து, தானும் அதில் சேர்ந்து பங்களிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக அவர் இந்த முயற்சியை முன்னெடுத்ததாக கூறுகிறார்.
இதையும் படியுங்கள் : டன்ஜியன்ஸ் & டிராகன்கள்: ஹானர் அமாங் தீவ்ஸ் -திரைப்பட விமர்சனம்!
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அந்தந்த மாவட்டங்களில் அவரால் இயன்ற அளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதனை மறுசுழற்சிக்காக விற்பனை செய்து அதில் கிடைத்த பணத்தையும் Walk For Plastic அமைப்பினரிடம் கொடுத்து உதவியுள்ளார்.
இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஏற்கனவே சாலைகளில் இருக்கும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து மறுசுழற்சிக்கு கொடுத்து கிடைக்கும் பணத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ரூபாய் வரை சேர்த்து மூன்று குழந்தைகள் வரை படிக்க வைத்து வருகின்றனர்.
இதனைக் கேள்விப்பட்டு இந்த சமூகத்தில் பொறுப்புள்ள ஒரு இளைஞனாக தன்னால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த பயணத்தை மேற்கொண்டதாக சொல்கிறார் விஜய். ஏற்கனவே, தனது மன நிம்மதிக்காக குறைந்த செலவில் 31 நாட்களில் லடாக் வரை பயணம் செய்த இவருக்கு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ”ஆச்சரியப்படக்கூடிய பல மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த பயணம் அதிகம் கற்றுக் கொடுத்துள்ளது” என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய்
சென்னை கிண்டி கத்திபாராவில் பயணத்தை தொடங்கிய விஜய், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று பிளாஸ்டிக் பொருட்களை முடிந்த வரை சேகரித்து அப்புறப்படுத்தியுள்ளார். இந்த பயணத்தின் மூலம் தன்னால் இயன்றவரை பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற உண்மையை கொண்டு சேர்த்துள்ளதாக அவர் கூறுகிறார்.
இதுகுறித்த முழு வீடியோவைக் காண :