பக்கவிளைவு ஏற்படுத்தும் கோவிட் தடுப்பூசிகளை திரும்பப் பெறும் அஸ்ராசெனக்கா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பக்கவிளைவு ஏற்படுத்தும் கோவிட் தடுப்பூசிகளை திரும்பப் பெறும் அஸ்ராசெனக்கா!


பிரித்தானிய மருந்து நிறுவனம் அஸ்ராசெனக்கா தடுப்பூசி ஏற்றுதலானது அரிதான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பின் அஸ்ட்ராசெனெக்கா அதன் கோவிட் தடுப்பூசியை உலகளாவிய ரீதியில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளது. அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசி, கோவிஷீல்டாக இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் மூலம் தயாரிக்கப்பட்டது.


கோவிட்க்கான புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளின் மிகுதியினால் வணிக காரணங்களுக்காக உலகளாவிய திரும்பப் பெறுதல் தொடங்கப்பட்டதாக தடுப்பூசி தயாரிப்பாளர் கூறியதாக The Telegraph தெரிவித்துள்ளது. 


புதிய மாறுபாடுகளைச் சமாளிக்கும் புதுப்பிக்கப்பட்ட தடுப்பூசிகளால் அஸ்ராசெனக்கா முறியடிக்கப்பட்டது, அஸ்ட்ராசெனக்கா தெரிவிக்கிறது.


குறித்த தடுப்பூசி இனிமேல் தயாரிக்கப்படப் போவதில்லை மற்றும் இனிமேல் அதனைப் பயன்படுத்த முடியாது என்பவற்றைக் காரணங்காட்டி நிறுவனம் தானாக முன்வந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் சந்தைப்படுத்தல் அங்கீகாரத்தை திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.


தடுப்பூசியைப் பயன்படுத்தி வரும் பிற நாடுகளிலும் இதே போன்று தடுப்பூசிகள் திரும்பப் பெறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.