சமூகம்

கொலை மிரட்டலில் ஐ.ஏ.எஸ்! - களையெடுத்தது காரணமா?

“அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் சொல்கிறார்கள். இப்போது மிரட்டல்கள் உச்சத்திலிருக்கும் நிலையில் அவரைக் கொலை செய்யக்கூடத் தயங்க மாட்டார்கள்”

Published:Updated:
வள்ளலார் ஐ.ஏ.எஸ்
பிரீமியம் ஸ்டோரி
வள்ளலார் ஐ.ஏ.எஸ்
Comments
Share
தமிழகத்தில், 1,950 கோடி ரூபாய்க்கான ‘பாரத் நெட்’ திட்ட ஒப்பந்தத்தில் ஆட்சியாளர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, தகவல் தொழில்நுட்பத்துறையின் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபு ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு கொடுத்த விவகாரம் சில மாதங்களுக்கு முன்னர் கொளுந்துவிட்டு எரிந்தது. இந்தநிலையில்தான், தமிழகத்தில் முக்கியமான துறைகளிலிருக்கும் சில ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குக் கடுமையான அழுத்தங்கள் தரப்படுகின்றன. ஆட்சி முடிவதற்குக் குறுகிய காலமே உள்ள நிலையில், ‘கிடைத்தவரை லாபம்’ என்று வாரிச்சுருட்ட நினைக்கும் சிலரது அழுத்தங்கள் தாங்காமல் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் அந்த அதிகாரிகள். அவர்களில் ஒருவரான ‘ஆவின்’ நிர்வாக இயக்குநர் வள்ளலார் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்குக் கொலை மிரட்டலே விடுக்கப்பட்டிருக்கிறது என்கிற `பகீர்’ தகவல் நமக்குக் கிடைத்தது.