கொங்குநாடு விவகாரம்: மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்த டிடிவி தினகரன்.!
TTV Dhinakaran say about kongunadu
சமூக வலைத்தளங்களில் கொங்குநாடு வேண்டும் என்று ஒரு தரப்பும், இல்லை., இல்லை., தமிழகத்தை பிரிக்க கூடாது என்று ஒரு தரப்பும் அனல்பறக்க விவாதம் செய்து கொண்டு இருக்கின்றன.
இதேபோல், தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் இந்த கொங்குநாடு விவகாரத்தில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
"தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.
எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும்.
எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்." என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran say about kongunadu