தேர்தலுக்கு முன்னர் வாகன வசதி செய்து தாருங்கள்: எம்பிக்கள் கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தேர்தலுக்கு முன்னர் வாகன வசதி செய்து தாருங்கள்: எம்பிக்கள் கோரிக்கை!


ஆரம்பத்தில் வழங்கப்பட்ட சுங்க வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்க முடியாவிட்டால், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் குறைந்த விலையில் வாகனம் அல்லது வாகன அனுமதிப்பத்திரம் வழங்குமாறு சபாநாயகர் மற்றும் அரசாங்கத் தலைவர்களிடம் அண்மையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.  


இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்ற குழுவில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க எம்.பிக்கள் குழு எதிர்பார்க்கிறது.


எதிர்வரும் தேர்தலில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு வாகனம் இல்லாதது பாரிய பிரச்சினையாக உள்ளதாக ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும்  சம்பந்தப்பட்டவர்களுக்கு  அறிவித்துள்ளனர்.


ஒரு வாகனம் கூட இல்லாத பல புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் இருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.